நாளை நடைபெறவிருந்த மொய் விருந்து விழாக்கள் ஒத்திவைப்பு
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் முழு பொதுமுடக்கத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மொய் விருந்து விழாக்கள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழா
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் முழு பொதுமுடக்கத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மொய் விருந்து விழாக்கள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால், வடகாடு, கொத்தமங்கலம், கீழாத்தூா்,கீரமங்கலம், பெரியாளூா் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமாா் 70 பேரின் மொய் விருந்து விழாக்கள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.