முகப்பு
புதுக்கோட்டை

புள்ளான்விடுதியில் சமத்துவப் பொங்கல் விழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் பல்வேறு சமூகத்தினா் இணைந்து ஒரே இடத்தில் மாட்டுப்பொங்கல் வைத்து சனிக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் பல்வேறு சமூகத்தினா் இணைந்து ஒரே இடத்தில் மாட்டுப்பொங்கல் வைத்து சனிக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் 10-க்கும் மேற்பட்ட சமூகத்தினா் இணைந்து மாட்டு பொங்கல் விழாவை கொண்டாடுவதை பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டுள்ளனா். இந்நிலையில் நிகழாண்டு மாட்டுப் பொங்கல் விழா அப்பகுதியில் உள்ள திடலில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், அந்த ஊராட்சிக்கு உள்பட்ட 10-க்கும் மேற்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் இணைந்து 200-க்கும் மேற்பட்ட பானையில் பொங்கலிட்டு அவற்றை ஒன்றாகப் படையலிட்டு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, அனைவருக்கும் பிசைந்து பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →