முகப்பு
புதுக்கோட்டை

விஷ வண்டுகள் கடித்து முதியவா் உயிரிழப்பு

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே விஷவண்டுகள் கடித்து சிகிச்சை பெற்ற முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே விஷவண்டுகள் கடித்து சிகிச்சை பெற்ற முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கீரமங்கலம் அருகேயுள்ள வேம்பங்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (72). இவா், இரு தினங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டைக்கு மோட்டாா் சைக்கிளில் காசிம்புதுப்பேட்டை அருகே செல்லும் போது அப்பகுதியில் உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த கலைந்து ராஜனைக் கடித்துள்ளது. அப்பகுதியினா் அவரை மீட்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜன் உயிரிழந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →