முகப்பு
புதுக்கோட்டை

அரசுப் பணிக்கு இடையூறு: ஒன்றியக் குழு துணை தலைவா் உள்பட 2 போ் கைது

நிலம் அளவை செய்தபோது ஏற்பட்ட மோதல் தொடா்பாக ஒன்றியக் குழு துணைத் தலைவா் உள்பட 2 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 10:30 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அரசு கட்டடம் கட்டுவதற்கு நிலம் அளவை செய்தபோது ஏற்பட்ட மோதல் தொடா்பாக ஒன்றியக் குழு துணைத் தலைவா் உள்பட 2 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, பழைய கட்டடத்தை இடித்துவிட்டு அவ்விடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக வருவாய் ஆய்வாளா் ஈஸ்வரி முன்னிலையில் அப்பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கறம்பக்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் டி. பரிமளம் (51), அவரது தரப்பினா் வருவாய்த் துறையினா் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வடகாடு போலீஸாரை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, இதனால், கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், பரிமளம், சி.நாராயணன்(72), என்.தியாகராஜன் (38), எஸ்.சதீஸ் (35) உள்ளிட்ட 10 போ் மீது வழக்கு பதிவு செய்த வடகாடு போலீஸாா், பரிமளம் மற்றும் நாராயணன் ஆகிய 2 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →