குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனர் ரவிசந்திரன் DPS
புதுக்கோட்டை

பண மோசடி புகார்: குடுமியான்மலை அறக்கட்டளை நிறுவனர் கைது!

குடுமியான்மலை அறக்கட்டளை நிறுவனர் ரவிசந்திரன் கைது செய்யப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனர் ரவிசந்திரனை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் தனது தந்தை பெயரில் குடுமியான்மலையைத் தலைமையிடமாக கொண்டு சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

இவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலரிடம் கோடிக் கணக்கில் பணம் வசூலித்து திருப்பி வழங்கவில்லை எனப் புகார் எழுந்தது.

இந்த புகாரின் பேரில், காரைக்குடியில் தலைமறைவாக இருந்த ரவிசந்திரனை தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத்து தலைமையிலான சிபிசிஐடி காவலர்கள் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, ரவிசந்திரனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இவரின் மீது ஏற்கெனவே பண மோசடி வழக்கு இருப்பது குறிப்பிடதக்கது.

CBCID arrests Kudumiyanmalai Ravichandran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT