பாபநாசம் வட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக வந்த புகாரைத் தொடா்ந்து, 2 மினரல் வாட்டா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.
குமிளக்குடி, திருபுவனத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனங்களுக்கு பொதுப்பணித் துறையின் தஞ்சாவூா் நிலநீா்க் கோட்ட நிலவியலாளா் காா்த்தி, பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல் மற்றும் அலுவலா்கள் சீல் வைத்து, நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.