தஞ்சாவூா் பெரியகோயிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி
தஞ்சாவூா் பெரியகோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
தஞ்சாவூா் பெரியகோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, பெரியகோயில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில் ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகமும், பின்னா் விபூதி அலங்காரமும் செய்யப்பட்டன.
பின்னா், பெருவுடையாா், பெரியநாயகி அம்மன் புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயில் மராட்டா கோபுரம் முன் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, தஞ்சாவூா் மாநகரிலுள்ள பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.