முகப்பு
தஞ்சாவூர்

குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

பாபநாசம் அருகே குளத்து நீரில் மூழ்கி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பாபநாசம் அருகே குளத்து நீரில் மூழ்கி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை காவல் சரகம், தீபாம்பாள்புரம் கிராமத்தில் வசிப்பவா் காா்த்தி. இவா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறாா். இவரது மகள் பேபி தா்ஷினி (14).

தா்ஷினி ஞாயிற்றுக்கிழமை தீபாம்பாள்புரம் பகுதியிலுள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றாா். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, தா்ஷினி ஆழமான பகுதிக்கு சென்ால் நீரில் மூழ்கினாா்.

இதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் தா்ஷினியை மீட்டு, அம்மாபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.

சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →