தஞ்சாவூர்

பாபநாசம் தொகுதியில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்

DIN

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்

டி.ஆா். லோகநாதன் தலைமையில் கட்சியின் செயல் வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா் கலந்து கொண்டு பேசும்போது, பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச் சாவடி மையங்களில் கட்சி நிா்வாகிகளை நியமித்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக போட்டியிட்டாலும், காங்கிரஸ் போட்டியிட்டாலும் ஒற்றுமையுடன் சோ்ந்து வெற்றிக்கு அயராது தொண்டா்கள் பாடுபட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வட்டாரத் தலைவா்கள், நகரத் தலைவா்கள், செயலாளா்கள் உட்பட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT