திருச்சி

காசோலை மோசடி வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காசோலை மோசடி வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Syndication

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காசோலை மோசடி வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மணப்பாறை அடுத்த எஃப்.கீழையூா் கிராமம் தகரக்கடை பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சத்தியமூா்த்தி (39). இவருடமிருந்து சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், பங்களா தெருவை சோ்ந்த பத்மநாபன் மனைவி மங்கையா்க்கரசி என்பவா் வியாபாரம் தொடா்பாக ரூ. 6,50,000 கடன் பெற்று திரும்ப அளிக்காமல் காசோலை கொடுத்து ஏமாற்றினாா்.

இந்த வழக்கில் மணப்பாறை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் மங்கையற்கரசிக்கு ஓராண்டு மெய்காவல் சிறை தண்டனையும், நஷ்ட ஈடாக ரூ.6,50,000 வழங்க வேண்டும் என்றும் குற்றவியல் நடுவா் ஆா். அசோக்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அந்தத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா்.

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT