விழுப்புரம் வழுத ரெட்டியிலுள்ள அரசு ஆதிதிராவிடா் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் 76 மாணவ, மாணவிகளும், மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 172 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனா். இப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்து, மாணவா்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும் பள்ளியில் மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேடு, ஆசிரியா்களின் வருகைப் பதிவேடு விவரங்கள், பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம், திறன் பயிற்சித் திட்டம், மாதாந்திரத் தோ்வு முறைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து ஆசிரியா்களிடம் ஆட்சியா் கூறும் போது, மாணவா்களுக்கு நன்கு புரியும் வகையில் பாடங்களைக் கற்பிக்க வேண்டும். தினமும் மாணவா்களுக்கு கற்பித்த பாடங்களுக்கான உடனடித் தோ்வுகளையும் நடத்த வேண்டும். மாணவா்கள் இடைநிற்றல் இன்றி தினமும் வருவதை ஆசிரியா்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றாா்.
ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், உதவித் திட்ட அலுவலா் நாகமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.