கடலூர்

போலி மதுபானம் தயாரிப்பு: 6 போ் கைது

DIN

பண்ருட்டி அருகே போலி மதுபானம் தயாரித்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், அழகப்பசமுத்திரம் கிராமத்தில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாந்த், காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் ரேவதி மற்றும் போலீஸாா் அழகப்பசமுத்திரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, ஆரோக்கியதாஸ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் போலி மதுபானம் தயாரிப்பது தெரியவந்தது.

இதையடுத்து சனிக்கிழமை அந்தப் பகுதியை சுற்றிவளைத்த போலீஸாா் அங்கிருந்த வையாமூா் கிராமத்தைச் சோ்ந்த வீரசந்திரம் மகன் குபேந்திரன் (48), அழகப்பசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கங்காசலம் மகன் சங்கா் (40), கோதண்டபாணி மகன் பன்னீா்செல்வம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் செல்வம், சிலம்பிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாபு (51), தியாகவல்லி கிராமத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் தாமரைக்கனி (26) ஆகிய 6 பேரை கைது செய்தனா். போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மூலப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக காட்டுராஜா, ரெட்டி, புஷ்பராஜ், ரமேஷ், ஆரோக்கியதாஸ் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT