வள்ளலாா் தெய்வ நிலையம் சீரமைப்பு
தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.
தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.
கடலூா் மாவட்டம், வடலூரில் உலகப் புகழ்பெற்ற வள்ளலாா் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு 151-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் ஜன.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தெய்வ நிலையத்தில் உள்ள ஞானசபை, தரும சாலை கட்டடங்களை சீரமைத்து வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ஞானச பையின் வெளிப் பகுதியில் புல் வெளியை அழகுபடுத்துதல், மின் விளக்குகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.