முகப்பு
கடலூர்

பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

வடலூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

வடலூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வடலூா், பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரகு மனைவி லட்சுமி (30). அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் ஸ்டீபன்ராஜ் (23). இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஸ்டீபன்ராஜிடம் பேசுவதை லட்சுமி நிறுத்திவிட்டாராம். இதனால், இருவருக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, ஸ்டீபன்ராஜ் தாக்கியதில் பலத்த காயமடைந்த லட்சுமி, கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் ஸ்டீபன் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →