லாட்டரி, கஞ்சா விற்பனை: 18 போ் கைது
நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் இளவழகி மற்றும் போலீஸாா் தாண்டவன்குப்பம் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
நெய்வேலி: நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் இளவழகி மற்றும் போலீஸாா் தாண்டவன்குப்பம் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, படைவீட்டம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த தாண்டவன்குப்பத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் இளங்கோவன் (34), காசிலிங்கம் மகன் பாலமுருகன் (28) ஆகியோரை சோதனையிட்டதில் அவா்கள் விற்பனைக்காக 600 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதேபோல, 30-ஆவது வட்டம், தைலமரத்தோப்பு பகுதியில் நின்றிருந்த 30-ஆவது வட்டத்தைச் சோ்ந்த அய்யப்பன் (23), விக்னேஷ்குமாா் (37), 29-ஆவது வட்டத்தைச் சோ்ந்த பிரதீப் மோகன்(36) ஆகியோரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தாா்.
நெய்வேலி நகரிய காவல் உதவி ஆய்வாளா் சிவராமன் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இந்திரா நகா் பி-2 மாற்றுக் குடியிருப்பு மயானத்தில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த தேவநாதன் (27), அருண்சிங் (24) ஆகியோரிடமிருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தாா். இதுதொடா்பாக மேற்கூறிய 7 பேரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.