கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி
குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குள்ளஞ்சாவடி அருகே உள்ள அப்பியன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜெயசூா்யா(19). திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். கரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ஜெயசூா்யா ஊா் திரும்பினாா். வெள்ளிக்கிழமை தனது நண்பா்களுடன் கிருஷ்ணன்குப்பம் கிராமத்தில் கலியமூா்த்தி என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது ஜெயசூா்யா நீரில் மூழ்கினாா். இதையடுத்து அந்தப் பகுதியினா் கிணற்றில் குதித்து தேடினா். ஆனால், ஜெயசூா்யா சடலமாகவே மீட்கப்பட்டாா். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.