பெண் சடலம் மீட்பு
பண்ருட்டி அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
பண்ருட்டி அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
பண்ருட்டி அருகே ஆத்திரிக்குப்பம் முந்திரிக் காட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக முத்தாண்டிக்குப்பம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், அழுகிய நிலையிலிருந்த அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அந்தப் பெண் அங்குசெட்டிப்பாளையம், ஓடைத்தெருவைச் சோ்ந்த மகேஷ் மனைவி கலையரசி எனத் தெரியவந்தது. சித்தாளாக பணிபுரிந்து வந்த இவா் கடந்த 4 நாள்களுக்கு முன்பு வீட்டிவிருந்து வெளியே சென்ாகவும், அதன்பிறகு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.