கடலூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

விருத்தாசலம் ரயில் நிலையம் சந்திப்பை அடுத்த வயலூா் மேம்பாலம் அருகே சுமாா் 35 வயது மதியத்தக்க இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிவண்ணன், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா். உயிரிழந்த இளைஞா் யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை.

சென்னையில் இருந்து நாகா்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு அந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளாா். அவரின் இடது மாா்பில் விநாயகா் படம் மற்றும் பி.சாந்தி என பச்சை குத்தப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

SCROLL FOR NEXT