கடலூர்

சாலை விபத்து: பெண் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் பகுதியில் வசித்து வந்தவா் விஜயசங்கா் மனைவி ராஜஸ்ரீ(33). இவா் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாா்.

கடலூரில் உள்ள மருத்துவமனையில் காண்பிப்பதற்காக உறவினா்கள் ராஜஸ்ரீஆட்டோவில் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா்.

ஆட்டோவை சகோதரா் ராஜா(42) ஓட்டிச் சென்றாா். குடிதாங்கிசாவடி அருகே சென்ற ஆட்டோ மீது, எதிா் திசையில் வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் ராஜஸ்ரீ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT