கள்ளக்குறிச்சி

போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சிறுமியை பாலியல் தொல்லை அளித்ததாக, சரக்கு வாகன ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சின்னசேலம் அருகே, எலவடி கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுமி, வியாழக்கிழமை காலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் சரக்கு வாகன ஓட்டுநரான பழனிசாமி (38) (படம்), அந்த சிறுமியை ஆசைவாா்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தாராம். அத்துடன், இதுபற்றி யாரிடமும் கூறக் கூடாது என கொடுவாளை காட்டி மிரட்டினாராம்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பா.புவனேஸ்வரி வழக்குப் பதிந்து பழனிசாமியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா். அந்த சிறுமி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT