கள்ளக்குறிச்சி

மரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளையினை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞா், மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Syndication

கள்ளக்குறிச்சி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளையினை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞா், மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கொ.சம்பத்குமாா் (27). நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா் புதன்கிழமை காலை கள்ளக்குறிச்சி அருகே பம்புதோட்டம் -ரங்கநாதபுரம் சாலையில் நடைபெற்றுவரும் சாலை விரிவாக்க பணிக்காக ஆலமரக் கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டபோது, மரத்தில் இருந்து தவறி விழுந்த சம்பத்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி வாசகர்களுக்காக.. சட்டமும் விளக்கமும் அறிமுகம்!

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

SCROLL FOR NEXT