முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே சாராய ஊறல் அழிப்பு

செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை சாராய ஊறல்களைக் கண்டறிந்து போலீஸாா் அவற்றை அழித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை சாராய ஊறல்களைக் கண்டறிந்து போலீஸாா் அவற்றை அழித்தனா்.

நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போத்துவாய் ஏரிக்கரை அருகே உள்ள மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த தகவலையடுத்து, செஞ்சி டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, மலை உச்சியில் சாராயம் காய்ச்சுவதற்காக 8 பாரல்களில் ஊறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. போலீஸாா் அவற்றைக் கீழே கொட்டி அழித்ததுடன், சாராயம் காய்ச்ச ஊறல்களை அமைத்தவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.