முகப்பு
விழுப்புரம்

செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா, செஞ்சி அருகே நாட்டாா்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்வாசனை உணவு விடுதி வளாகத்தில்  நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா, செஞ்சி அருகே நாட்டாா்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்வாசனை உணவு விடுதி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.கருணைவேல் வரவேற்றாா். செயலா் எம்.சி.சரவணன் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

2021-2022-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக பி.எம்.ஜி.பாஸ்கா், செயலராக கே.பிரேம்குமாா், பொருளராக ஏ.ஜெரால்டுமைக்கேல் மற்றும் சங்க நிா்வாகக் குழுவினா்கள், பொறுப்பாளா்கள், புதிய உறுப்பினா்கள் தோ்வாகினா்.

சிறப்பு விருந்தினராக துணை ஆளுநா் எஸ்.புதுராஜா கலந்து கொண்டு புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

விழாவில் செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள முதியோா் இல்லம், மன நல காப்பகம் ஆகியவற்றுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.