செய்திகள்

தனியா ஒரு பொம்பளை வாழறதுங்கறது 100% கஷ்டம்: வனிதா விஜயகுமார்!

சரோஜினி

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீஸன் 3 ரியாலிட்டி ஷோ. இதில் முதற்கட்டமாகப் பங்கேற்றவர்கள் மொத்தம் 16 பேர். அவர்களில் முதலில் எலிமினேஷனுக்குத் தேர்வானவர் பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான ஃபாத்திமா பாபு. ஃபாத்திமா பாபு கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இரண்டாம் நபராக வனிதா விஜயகுமாரின் பெயர் அறிவிக்கப்பட்டது. தனது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு பிரச்னைகள் காரணமாக சர்ச்சைக்குரிய நபராக அடையாளம் காணப்படும் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமல்ல வனிதாவே எதிர்பார்த்திருக்கவில்லை.

இச்சூழலில் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டதும் சினிமா எக்ஸ்பிரஸின் சுதிர் ஸ்ரீனிவாசனுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார். அந்த நேர்காணலில் பிக்பாஸ் வீட்டினுள் தனக்கேற்பட்ட அனுபவங்கள் மற்றும் அது குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

வனிதா, சுதிருடன் பேசியதிலிருந்து சில பகுதிகள் தினமணி.காம் வாசகர்களுக்கும் காணொலியாகத் தரப்படுகிறது.

முழுமையான விடியோவுக்கு சினிமா எக்ஸ்பிரஸ் தளத்துக்குச் செல்லலாம்.

இந்த காணொலி உங்களுக்குப் பிடித்திருந்தால் தொடர்ந்து இது போன்ற சுவாரஸ்யமான காணொலிகளைக் காண மறக்காமல் தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

Video Courtesy: Cinima Express

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT