செய்திகள்

நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் சர்ச்சை: புதிய புகைப்படம் வெளியானது!

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் சர்ச்சை எழுந்ததையடுத்து புதிய புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது நடிகை நயன்தாரா தரப்பு.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள். இதன் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். 

நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தில் ஊசி தென்படாததால் அதுகுறித்து ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினார்கள். ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டது எப்படி என்கிற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு, நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT