செய்திகள்

ரசிகர்களே ரெடியா? நாளை வெளியாகிறது 'மணி ஹெய்ஸ்ட்'

DIN

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் பெரும் வரவேற்பு பெற்ற மணிஹெய்ஸ்ட் தொடர் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வங்கி திருட்டை அடிப்படையாகக் கொண்டு ‘மணி ஹைஸ்ட்’ வெப்சீரிஸின் முதலிரண்டு பாகங்கள் 2017-இல் வெளியாகின. அடுத்த இரண்டு பாகங்கள் 2019-2020-இல் வெளியாகின. இதன் கதாபாத்திரங்கள் இந்தியா உள்பட உலகளவில் மிகவும் பிரபலமாகின.

கரோனா பொதுமுடக்கம் அமலானபோது இந்த இணையத் தொடர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட இந்த வெப்சீரிஸுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. இந்நிலையில் இதன் இறுதி பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மணி ஹெய்ஸ்டின் மணி ஹைஸ்ட் 5-வது பாகம் தலா 5 அத்தியாயங்கள் என இரண்டு பகுதிகளாக வெளியாகிறது. முதல் பகுதி செப்டம்பர் 3-ம் தேதியும், 2-ம் பகுதி டிசம்பர் 3 தேதியும் வெளியாகின்றன.

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள இந்தத் தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT