முகப்பு
செய்திகள்

''அஜித் பிரபல நடிகர் என்று தெரிந்துகொண்டேன். ஆனால்...'' - நடிகர் அஜித்துடனான சந்திப்புக்கு பிறகு பிரபலம் கருத்து

நடிகர் அஜித்துடனான சந்திப்பு குறித்து மாரல் யாஜர்லு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:


நடிகர் அஜித்துடனான சந்திப்பு குறித்து மாரல் யாஜர்லு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பைக்கில் உலகம் சுற்றும் பெண் மாரல் யாஜர்லு என்பவர் சில நாட்களுக்கு முன் தில்லி வந்தார். அவரை நடிகர் அஜித் சந்தித்து, உலகப் பயணம் குறித்து ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் மாரல் யாஜர்லுவை மீண்டும் நடிகர் சந்தித்துள்ளார். அப்போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள் மாரல், நான் அஜித் குமாரிடம் உலகப் பயணம் குறித்து எனது அனுபவங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டேன்.

அவர் தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் எங்களது புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் கிடைத்த வரவேற்புக்கு பிறகே அவர் ரசிகர்களால் மிகவும் நேசிக்கக் கூடிய மனதர் என்று தெரிந்துகொண்டேன். 

நான் ஒருவரை தொழில் சார்ந்து பணி சார்ந்து மதிப்பிடுவதில்லை. நாம் மனிதர்களாக எப்படி வித்தியாசப்படுகிறோம் என்பதே முக்கியம். அஜித் மிக தன்னடக்கமாக பேசுகிறார். மரியாதைக்குரிய மனிதராக நடந்துகொண்டார். மிகவும் சிறந்த மனிதர். அவர் சமூக வலைதளங்களில் இல்லை. இதனால் அவரது சுதந்திரத்தில் நாம் தலையிடக் கூடாது. அவரது அனுமதியுடனேயே புகைப்படங்களை பகிர்ந்தேன் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →