முகப்பு
செய்திகள்

சிம்புவின் மாநாடு படம் வெளியாவதில் சிக்கல் ? : பரபரப்பு தகவல்

கொரியன் படமான ஏ டே படத்தின் தழுவலாக மாநாடு படம் உருவாகியுள்ளதாக கூறப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

Updated On : 16 அக்டோபர், 2021 at 12:13 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:53 AM

கொரியன் படமான 'ஏ டே' படத்தின் தழுவலாக 'மாநாடு' படம் உருவாகியுள்ளதாக கூறப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் மெகரசைலா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்தப் படம் காலத்தை மாற்றக் கூடியதாக சொல்லப்படும் டைம் லூப் என்ற வகையில் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்தப் படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ஏ டே' படத்தின் தழுவல் என்ற சர்ச்சை உருவாகியுள்ளது. 

மேலும் ஏ டே படக்குழுவினர் மாநாடு தயாரிப்பாளருக்கு விளக்கம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவிவருகிறது. இதன் காரணமாக மாநாடு படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தத் தகவல் வதந்தியாகவும் இருக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.