செய்திகள்

'இந்திய சினிமாவின் கொடியை...' - ராக்கி பாயை பாராட்டிய புஷ்பா

DIN

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. வெளியான முதல் 6 நாட்களில் ரூ.600 கோடி வசூலித்து சாதனைபடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'கேஜிஎஃப் 2' படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''கேஜிஎஃப் 2'வுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். யஷ் மிரட்டிவிட்டார். நடிகர் சஞ்சய் தத் தனது நடிப்பின் மூலம் காந்தம்போல ஈர்க்கிறார். சிறப்பான பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு. 

எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன். இது பிரஷாந்த் நீலின் பிரம்மாண்டமான படைப்பு. இவருடைய கற்பனைத் திறனுக்கும் படமாக்கும் விதத்துக்கும் எனது மரியாதை. சிறப்பான காட்சி அனுபத்துக்கும் இந்திய சினிமாவின் கொடி உயர பறக்க வைத்ததற்கும் நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். 

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்று அல்லு அர்ஜுன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT