செய்திகள்

மீண்டும் சின்னத்திரை தொடரில் நாயகியாக களமிறங்கும் குஷ்பு: புகைப்படங்கள் இதோ

நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய தொடரில் நடிகை குஷ்பு நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகை குஷ்பு தொலைக்காட்சியில் ஜாக்பாட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், கல்கி, நந்தினி, லக்ஷ்மி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

ஜோதி, கோகுலத்தில் சீதை தொடர்களில் சிறப்பு வேடங்களிலும் தோன்றிய அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரை தொடர் ஒன்றில் நாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கலர்ஸ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் மீரா என்ற தொடரில் நடிகை குஷ்பு முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.  மேலும் இந்தத் தொடருக்கு கதையையும் அவர் எழுதியுள்ளார்.

இந்தத் தொடர் சமீபத்தில்  பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

பொறியியல் பணிகளால் விழுப்புரம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT