செய்திகள்

ஓராண்டு காலமாக தாடி வளர்த்த பிக்பாஸ் பிரபலம்! காரணம் என்ன ?

DIN

தொலைக்காட்சி தொடர்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரியோ ராஜ். இவர் பிக்பாஸிலும் கலந்துக் கொண்டுள்ளார். 

2019இல் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் 2021இல் ‘பிளான் பண்ணிப் பண்ணனும்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் ரம்யா நம்பீசன் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

தற்போது ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ‘ஜோ’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை டாக்டர் டி. அருள்நந்து தயாரிக்க சித்து குமார் இசையமைத்துள்ளார்.  பவ்யா டிரிகா 

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் ரியோ ராஜ். சிவகார்த்திகேயன் மாதிரி தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் ஜெயிக்க போராடும் ரியோ ராஜ்க்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கிறது. 

17 வயதிலிருந்து 27 வயது வரை உள்ள இளைஞன் ஒருவனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு- கேரள எல்லையில் உள்ள கல்லூரியில் நடக்கும் கதையாக இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக தாடியை வளர்த்தாக ரியோ ராஜ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பூஜையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. 

விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT