ஒரு சித்தப்பாவாக என் மகன் சிவராஜ்குமாரை வாழ்த்துகிறேன்: கமல் ஹாசன்
நடிகர் சிவராஜ்குமாரை கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்...
நடிகர் கமல் ஹாசன் நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்தியுள்ள விடியோ ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல் ஹாசனின் தீவிரமான நட்சத்திர ரசிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். மிக இளவயதிலிருந்தே கமல் மீது பெரிய அன்புகொண்டவர்.
அவருடைய படங்களையும் தோற்றத்தையும் பலமுறை வியந்து குறிப்பிட்ட சிவராஜ்குமார், ஒருமுறை கமல் தன்னைத் தொட்டதால் மூன்று நாள்கள் குளிக்கவில்லை என்பதையும் தெரிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கன்னட சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த சிவராஜ்குமாரை வாழ்த்தும் விதமாக கமல் ஹாசன் தரப்பிலிருந்து விடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில் பேசிய கமல் ஹாசன், “நடிகர் சிவராஜ்குமார் எனக்கு மகன் மாதிரி. நான் அவருக்கு சித்தப்பா போல. ராஜ்குமார் அண்ணன் காட்டிய அன்பு எதிர்பாராதது. காரணம், நாங்களெல்லாம் ஒரே ஸ்டூடியோவில் வளர்ந்த பிள்ளைகள். அன்று துவங்கிய உறவு, அவருக்குப் பின்பும் தொடர்ந்து வருகிறது. சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்தது சிவண்ணாவுக்கு (சிவராஜ்குமார்) எப்படி இருந்தது எனத் தெரியவில்லை.
ஆனால், அவர் என்னை முதன்முதலில் என் ரசிகராகச் சந்தித்தார். அன்றிலிருந்து தன் தந்தையின் வழியில் கடுமையாக முயற்சித்து இன்று மாபெரும் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். சிவண்ணா உங்களின் 50 ஆம் ஆண்டிலும் நான் இருப்பேன். என் அன்பு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: லோகேஷ் உடனான படம் எப்போது ஆரம்பம்? அமீர் கான் பதில்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.