பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!
பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது...
சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் பீரியட் அரசியல் கதையாக எடுக்கப்பட்டு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வருவதால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது என பலரும் நம்புகின்றனர்.
Advertisement
இப்படத்தில் வில்லனாக ரவி மோகனும், முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, ஸ்ரீலீலா, ஃபாசில் ஜோசஃப் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்