கோப்புப் படம் 
வேலைவாய்ப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜேஆர்எப், கள உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினமணி செய்திச் சேவை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜேஆர்எப், கள உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

விளம்பர எண். MOES/PAMC/DOM/145/2023 (E-14628)

பணி: JRF

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.31,000+16% எச்ஆர்ஏ

தகுதி: நுண்ணுயிர் மரபணு தொழில்நுட்பம், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், மரபியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி முடித்திருப்பதுடன் கேட், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Field Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.20,000+4% எச்ஆர்ஏ

தகுதி: தாவரவியல், விலங்கியல், வாழ்க்கை அறிவியல் ஆகிய ஏதாவதொன்றில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவும்.

விண்ணப்பிக்கும் முறை: முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து shanmugaiah.biological@mkuniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.8.2025

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும் அல்லது www.mkuniversity.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Applications are invited from the interested candidates for the following on a purely temporary basis to work on the research project entitled "Studies on ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT