அரசுப் பணிகள்

வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - டிஆர்பி அறிவிப்பு

தினமணி

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: வட்டார கல்வி அலுவலர்(Block Educational Officer)

காலியிடங்கள்: 33

சம்பளம்: மாதம் ரூ.36,900-1,16,600

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டம்(பி.எட்) முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கட்டாய தமிழ் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வுக் கட்டணம்: ரூ.600. இதில் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.7.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

SCROLL FOR NEXT