ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடக்கும் தேதி மாற்றம்!
நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம், அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லி: நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம், அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதெற்கென தனி மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதிலுள்ள அம்சங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்குபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
அதில் இன்னும் சில அம்சங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாததால் அக்கூட்டம் நாளை மறுநாள் (25-ஆம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த கூட்டமானது அடுத்த மாதம் 2 மற்றும் 3- ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், மீதமுள்ள அம்சங்கள் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.