முகப்பு
இந்தியா

குஜராத் மீனவர்கள் பாக். கடற்படையால் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சனிக்கிழமை சிறைபிடித்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

இந்தியா, பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள கடற்பகுதியில் குஜராத் மீனவர்கள் மீன்படித்து வந்தனர். 

அப்போது அங்கு மீன்படித்த சிலர் இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குச் சென்று மீன்பிடித்துள்ளனர்.

இதன்காரணமாக அந்த மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்துள்ளது.

Advertisement

கட்ச் தீவுகளின் அருகில் வெள்ளிக்கிழமை இரவு ஜகாவு கடற்பகுதியில் உள்ள ஐ.எம்.பி.எல். என்ற இடத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான எல்லைப்பகுதியில் மீன்பிடித்த 55 குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 9 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். 

இதுபோன்று எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 79 குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 13 படகுகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments