முகப்பு
இந்தியா

டிசம்பர் 15-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: மத்திய அமைச்சரவை முடிவு! 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ஆம் தேதி முதல் துவங்குவது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

புதுதில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ஆம் தேதி முதல் துவங்குவது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு என இரண்டிற்கும் கூட்டங்கள் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ஆம் தேதி துவங்குவது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தினை ஜனவரி 5-ஆம் தேதி வரை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது

அமைச்சரவையின் இந்த முடிவானது ஜனாதிபதிக்கு தீர்மானமாக அனுப்பப்படும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.             

முழு கட்டுரையைப் படிக்க →