முகப்பு
இந்தியா

புதுச்சேரியில் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ  மாணவர்கள் நீக்கம்!

விதிமுறைகளை மீறி சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

புதுச்சேரி: விதிமுறைகளை மீறி சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2016-17 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சேர்க்கை நடைமுறைகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக பரவலாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி, புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்க இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக சம்மந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →