FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உலகின் மிகப் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற இரண்டே இந்திய நகரங்கள்!

உலகின் மிகப் பாதுகாப்பான நகரங்களின் வரிசையில் இந்தியாவின் தலைநகர் தில்லி இடம்பிடித்துள்ளது. 60 நகரங்களைக் கொண்ட பட்டியலில் 55 புள்ளிகளுடன் 52வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Updated On : 30 ஆகஸ்ட் 2019, 3:31 pm IST
பகிர்:

உலகின் மிகப் பாதுகாப்பான நகரங்களின் வரிசையில் இந்தியாவின் தலைநகர் தில்லி இடம்பிடித்துள்ளது. 60 நகரங்களைக் கொண்ட பட்டியலில் 55 புள்ளிகளுடன் 52வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பொருளாதார பாதுகாப்பு நகரங்களின் குறியீடு பட்டியல் 2019ல் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

57 விஷயங்களை அடிப்படையாக எடுத்து ஆய்வு செய்து உலகின் முக்கிய நகரங்கள் 60ஐ அலசி ஆராய்ந்து இங்கு பட்டியலிட்டுள்ளது. இதில் முக்கிய விஷயமாக டிஜிட்டல், சுகாதாரம், கட்டமைப்பு, தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட 4 முக்கிய விஷயங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன.

Advertisement

Advertisement

தில்லியுடன் இந்தியாவைச் சேர்ந்த மேலும் ஒரே ஒரு நகரம் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அது, நமது நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பை. அது 58.2 புள்ளிகளுடன் 45வது இடத்தை லிமா என்ற நகரத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது. 

2017ல் வெளியான இதே பட்டியலில் இந்தியாவின் தில்லி 62.34 புள்ளிகளைப் பெற்று 43வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு 9 இடங்கள் சரிந்து 52வது இடத்தில் உள்ளது. அதே சமயம் வாஷிங்டன் 23வது இடத்தில் இருந்து, இந்த ஆண்டு 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய - பசிஃபிக் நாடுகளைச் சேர்ந்த நகரங்களே முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. ஜப்பானின் டோக்கியோ முதல் இடத்தில் நீடிக்கிறது. கடைசி இடத்தில் நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகர் பிடித்துள்ளது.

மேலும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments