இந்தியா

மசூத் அஸாரை விடுவித்தது யார் என்பதை நாட்டுக்கு சொல்லுங்கள்: மோடிக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதி மசூத் அஸாரை விடுவித்த பாஜக அரசு தான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

PTI


ஹவேரி: பயங்கரவாதி மசூத் அஸாரை விடுவித்த பாஜக அரசு தான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது, கந்தகார் விமானக் கடத்தலின் போது பாஜக தலைமையிலான அரசு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸாரை விடுவிக்காமல் போயிருந்தால் புல்வாமா தாக்குதலே நடந்திருக்காதே என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல், விமானக் கடத்தலின் போது பயணிகளை விடுவிக்க, பயங்கரவாதி மசூத் அஸாரை விடுவிப்பது என்ற வாஜ்பாயி அரசின் முடிவை கடுமையாக விமரிசித்திருக்கும் ராகுல், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்துக்கு எப்போதும் அடிபணிந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சீனப் பிரதமருடன் படகில் அமர்ந்து மோடி படகுப் பயணம் செய்து கொண்டிருந்த போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குட்பட்ட டோக்லாமை கைப்பற்றியது. இது உலகுக்குத் தெரியும். ஆனால் அது அப்போது மோடிக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் ராகுல் மிகக் காட்டமாகப் பேசினார்.

மோடி ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறுகிறார். ஆனால் அவர்தான் ஊழலே. அனில் அம்பானியின் பாக்கெட்டில் மோடி ரூ.30 ஆயிரம் கோடியை போட்டுள்ளார் என்றும் ராகுல் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT