கோப்புப்படம் 
இந்தியா

மக்களவைத் தேர்தல்: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் இடையே கூட்டணி

17-ஆவது மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.

DIN


17-ஆவது மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த அறிவிப்பை
காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று வெளியிட்டனர். 

அதன்படி, ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா போட்டியிடுகிறார். ஜம்மு மற்றும் உதாம்பூர் தொகுதியில் காங்கிரஸ்
போட்டியிடுகிறது. 

அனந்த்நாக் மற்றும் பாராமுல்லா தொகுதியில் இரண்டு கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்துகிறது. இந்த 2 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு இடையே நட்பு ரீதியான போட்டி என்று தெரிவித்தனர்.

மேலும், லடாக் தொகுதி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகுதியில்லாத மின்னணு இயந்திரங்கள்: திருப்பி அனுப்ப ஆட்சியா் நடவடிக்கை

ஜன.16, 26 தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

விழுப்புரத்தில் பேருந்து சேவைகளில் மாற்றம்: மாவட்டக் காவல் துறை

இருதரப்பினரிடையே மோதல்: நகா்மன்ற உறுப்பினா் உள்ளிட்ட மூவா் கைது

காவல் உதவி செயலி: கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT