முகப்பு
இந்தியா

மும்பை தாராவியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மும்பை தாராவியில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

மும்பை தாராவியில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான, தமிழர்கள் அதிகளவு வசிக்கும் மும்பை தாராவியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு இன்று மட்டும் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அங்கு கரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அப்பகுதியில் கரோனாவுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 1985 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149 பேர் பலியாகியுள்ளனர். தாராவியில் வசிக்கும் 7.5 லட்சம் மக்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →