முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த ரகசிய தகவலையடுத்து, சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் டிக்கென் என்ற பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் இருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேலும் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

இத்தகவலை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →