இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: ரஜெளரி அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் கைது

PTI


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்த நபரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர்.

நௌஷேரா செக்டார் அருகே நடமாடிக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடுருவல்காரரை வெள்ளிக்கிழமை இரவு பார்த்த இந்திய ராணுவத்தினர் உடனடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாள்களில் இதுபோன்ற ஊடுருவல் நடப்பது இது இரண்டாவது முறையாகும்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதி, நக்யால் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரெஹ்மான் (28) கடந்த 15-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பூஞ்ச் மாவட்டத்துக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT