மிசோரம் மற்றும் அசாமில் நிலநடுக்கம்
மிசோரம் மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை பதிவானது.
மிசோரம் மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை பதிவானது.
நிலநடுக்கவியல் தேசிய மையம் வழங்கிய தரவுகளின்படி, இன்று காலை 11:16 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. மிசோரம் மாநிலத்தின் சம்பாயி-லிருந்து தென்கிழக்கில் 29 கி.மீ தொலைவில் இதன் தாக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அசாமில், கர்பி அங்லாங் அருகே 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.