இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 178 பேர் பலி

DIN


மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (திங்கள்கிழமை) ஒரேநாளில் 178 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 2,786 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,10,744 ஆக உயர்ந்துள்ளது. இதில் 56,049 பேர் குணமடைந்துள்ளனர். 4,128 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,066 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 59,201 ஆகவும், பலி எண்ணிக்கை 2,248 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 30,125 பேர் குணமடைந்துள்ளனர். 26,828 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT