முகப்பு
இந்தியா

5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தோர் விகிதம் 53% உயர்வு

நாட்டில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 53 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தோர் விகிதம் 53% உயர்வு
பகிர்:

நாட்டில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 53 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக்காப்பகத் தரவுகளின்படி இந்தியாவில் 2014 ஆண்டிலிருந்து மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டில் மாரடைப்பால் 18 ஆயிரத்து 309 பேர் உயிரிழந்த நிலையில் 2019 ஆண்டில் 28 ஆயிரத்து 5 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வயதினரிடையும் மாரடைப்பால் உயிரிழக்கும் விகிதம் அதிகரித்துள்ளது. 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் 2016ஆம் ஆண்டில் 1940 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிகை 2019ஆம் ஆண்டில் அதிகரித்து 2381ஆக உள்ளது.

அதேபோல் மாரடைப்பால் உயிரிழக்கும் 30 முதல் 45 வயதினர் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில்  6 ஆயிரத்து 646-ல் இருந்து 2019ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மாரடைப்பால் 2014 ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 309 பேரும், 2015ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 820 பேரும், 2016 ஆம் ஆண்டில் 21 ஆயிரத்து 914 பேரும், 2017ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 246 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் 25 ஆயிரத்து 764 பேரும், 2019ஆம் ஆண்டில் 28 ஆயிரத்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முழு கட்டுரையைப் படிக்க →