சத்தீஸ்கரில் பேருந்து விபத்து: 7 தொழிலாளர்கள் பலி
சத்தீஸ்கரில் லாரியுடன் பேருந்து மோதிய விபத்தில் 7 தொழிலாளர்கள் பலியானார்கள்.
சத்தீஸ்கரில் லாரியுடன் பேருந்து மோதிய விபத்தில் 7 தொழிலாளர்கள் பலியானார்கள்.
ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று குஜராத்தை நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்தப் பேருந்து சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.