நாட்டில் கரோனா பாதிப்பு 53 லட்சத்தைக் கடந்தது: ஒரே நாளில் 1,247 பேர் பலி
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,08,015 -ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 93,337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,08,015 -ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 93,337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:
கரோனாவில் இருந்து 42,08,432 போ் இதுவரை மீண்டுள்ளனா். மொத்த கரோனா பாதிப்பில் இது 78.86 சதவீதமாகும். சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,247 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 85,619 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது.
தற்போது 10,13,964 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 19.52 சதவீதமாகும்.
மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கா்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்தான் கரோனா தொற்று அதிகம் உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் 59.3 சதவீதம் போ் இந்த 5 மாநிலங்களில்தான் உள்ளனா். அதே நேரத்தில் அந்த மாநிலங்களில்தான் குணமடைந்தோா் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 6,24, 54, 254 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 8,81,911 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.